டெல்லி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மோகேரி போட்டியிட உள்ளார்.

நேற்று முன்தினம் மராட்டியம், ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் கமிஷன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது.

அங்கு நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23 ஆ தேதி எண்ணப்படுகின்றன. வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவரை எதிர்த்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோகேரி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.