அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அகர்தலா – லோக்மான்யா திலக் ஜங்ஷன் இடையே இயக்கப்படும் இந்த பயணிகள் விரைவு ரயில் திபலாங் ரயில் நிலையம் அருகே சென்ற போது ரயில் என்ஜின் உள்பட 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வடகிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட பர்தார்புல் மலை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், லூம்திங் – பாதர்பூர் இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற ரயிலில் பயணித்த பயணிகள் குறித்து தகவல்களை அறிந்துகொள்ள ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 03674 263120, 03674 263126