டேராடூன்

த்தரகாண்ட் அரசு பொதுச் சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது இங்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என ஆளும் பாஜக வாக்குறுதி அளித்தது .தற்போது உத்தர்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் உத்தரகண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டிய போது பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தமி தாக்கல் செய்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு மார்ச் 13 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள்ளார்.

வரும் 9-ம் தேதியன்று உத்தர்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட உள்ளதால்  அன்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கு இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.