பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ரத்த அழுத்தம் காரணமாக 7-10-2024 அதிகாலை 12:30 அளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதை மறுத்துள்ள ரத்தன் டாடா, “எனது வயது மற்றும் உடல்நிலை தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து கவலைப்பட . ஒன்றுமில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகள் குறித்து அறிந்தேன், “என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி” என்று அந்தப் பதிவில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.

1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்த ரத்தன் டாடா தற்போது டாடா அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.