ண்டிகர்

ரியானா மாநில முன்னா எம் பி ஒருவர் ஒரே நாளில் காலையில் பாஜக மற்றும் மாலையில் காங்கிரஸ் என கட்சி மாறி உள்ளார்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதியுடன் அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெறுஅதால் அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவில் மொததமுள்ள 90 தொகுதிகளில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இம்மாநில முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் இன்று காலையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர்  கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

க்ட்ந்த  2019ல் காங்கிரசில் இருந்து விலகி, 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார். பிறகு அங்கிருந்து பாஜகவுக்கு சென்ற அவர், 2024 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற, பாஜகவில் இருந்து விலகி தற்போது மீண்டும் காங்கிரசுக்கே திரும்பியுள்ளார்,