டெல்லி

ன்று நவரத்த்திரி விழா தொடக்கத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இன்று தொடங்கும் நவரத்திரி விழா வரும் 12 ஆம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. எனவே இன்றைய் நவராத்திரி விழாவை தொடக்கத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

“நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனித திருவிழா சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாகும். இந்த திருவிழா நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த புனித நாள் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பால் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியூட்டட்டும்.

நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலபுத்ரியை பிரார்த்தனை செய்கிறேன். அவள் அருளால் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தேவியின் இந்த பிரார்த்தனை உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.