பாலக்காடு

கேரள ஆளுநர் மகாத்மா காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது அவரது துண்டில் தீ பிடித்துள்ளது.

சபரி ஆசிரமம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி வந்து சென்ற அகத்தேதரா என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ‘சபரி’ ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றிருந்தார்.

அவர் அங்கிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்திய்போது ஆரிப் முகமது கான் கழுத்தில் அணிந்திருந்த துண்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு முன்னாள் வைக்கப்பட்டிருந்த விளக்கில் பட்டு தீப்பற்றி எரிந்தது.

அவர் இதை கவனிக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆளுநரை எச்சரிக்கை செய்து அவரது கழுத்தில் இருந்த துண்டை அகற்றி தீயை அணைத்தனர்.

எனவே தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஆளுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் இந்த திடீர் தீ விபத்து மக்களிடையே பதட்டத்தை உண்டாக்கியது.