நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார்.

இதுகுறித்து விளக்கமளித்த ஆர்த்தி, இது தனது கணவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும் இந்த விவகாரத்தில் தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தியிடம் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை மீட்டுத் தரக்கோரி நடிகர் ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.

பின்னர் புகார் அளித்த கையேடு மும்பைக்கு கிளம்பிய ஜெயம் ரவி இனி மும்பையிலேயே தங்கியிருந்து படவாய்ப்புகளை தேடப்போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதிக்கவில்ல்லை. தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் இல்லை. இந்த விஷயத்தின் முடிந்த அளவிற்கு என்னுடைய தன்மானத்தை நான் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன்.

உண்மையை மறைக்க என்னை தவறாக சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். திருமணம் என்கிற பந்தத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் நான் புன்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலனே எனக்கு முக்கியம்” என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.