கொல்கத்தா

மத்திய அரசு மேற்கு வங்க வெள்ளப் பாதிப்புக்கு எந்த உதவியும் செல்லவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  நேற்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,

“மாநிலத்தில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு உதவவில்லை. வடக்கு வங்கம் வௌ்ளத்தில் தத்தளிக்கிறது. கூச் பெகார், ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள பாதிப்புகளை திரிணாமுல் அரசு போர்க்கால அடிப்படையில் சமாளித்து வருகிறது. ஆறுகளின் அருகே வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்ற பொது முகவரி அமைப்பை மாநில அரசு தொடங்கி உள்ளது.

பாஜக தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மேற்குவங்காளத்துக்கு வருவார்கள். பின்னர் குறிப்பாக இந்த மாநிலத்தை மறந்து விடுவார்கள். மேற்குவங்காளத்துக்கு மட்டுமே வௌ்ள நிவாரணம் வழக்கப்படுவதில்லை. இயற்கை பேரிடர்களை சமாளிக்க மேற்குவங்காளத்துக்கு பாஜக அரசு உதவவில்லை.

நாங்கள் பலமுறை நினைவூட்டியும் பராக்கா அணையின் பராமரிப்பு பணிகளை மத்திய அரசு செய்யவில்லை. இதனால் அணையின் கொள்ளளவு வெகுவாக குறைந்து விட்டது. டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவ வீரர்களுடன் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

வெள்ள பாதிப்புக்கு உதவி கேட்டு நான் பிரதமருக்கு கடிதம் எழுதினால், அவரது மந்திரிகளில் ஒருவர் பதிலளிப்பார். அது சரியல்ல என்றால் ஒருவேளை நான் அதை மீண்டும் சரிசெய்து மற்றொரு கடிதத்தை அனுப்ப வேண்டியிருக்கும்

எனத் தெரிவித்துள்ளார்.