திருப்பதி

திருப்பதி கோவிலுக்க் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரிய வந்துள்ளது.

திருப்பதி கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. தற்போதுபுரட்டாசி மாதம் என்பதால், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி – திருமலையில் குவிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக நடந்து திருமலையை அடைகின்றனர். நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாடி வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே கடந்த 27 ஆம் தேதியன்று இரவு சிறுத்தை ஒன்று வந்ந்துள்ளது.

கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டனர். நடைபாதையில் இருந்த இரண்டு நாய்களை அந்த சிறுத்தை துரத்த, அதிருஷ்டவசமாக அவ அங்கிருந்து தப்பிச் சென்றன. பிறகு அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

மேலும் மலைப்பாதையில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான, சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். தேவஸ்தானம் சார்பில் ப்க்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.