ம்மு

ன்று ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 26 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ந்டைபெற உள்ளது.

தேர்தல் ஆணையம் காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. இங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் காஷ்மீர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர்.

மேலும் மாநில முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் என்ஜினீயர் ரஷித் (அவாமி இத்திகாட் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் காஷ்மீர் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

இ கடந்த 18 ஆம் தேதி காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இன்ரு ஜம்முவின் 3 மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகள் உள்பட 26 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பால், கன்யார், ஹப்பக்கடல், லால் சவுக், சன்னபோரா, ஜாதிபால், ஈத்கா, சென்ட்ரல் ஷால்தெங் ஆகிய தொகுதிகள் இதில் அடங்கும்.