புதுச்சேரி

த்திய அரசு புதுச்சேரிக்கு ரு. 5828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமியை மத்திய அரசின் உள்துறை செயலர் கோவிந்த் மோகன் சந்தித்தபோது அவரிடம் புதுச்சேரியில் நிலுவையில் இருக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ரங்கசாமி வழங்கினார்.

இதை தவிர

“புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.3,925 கோடி, ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட ரூ.420 கோடி, மருத்துவம் மற்றும் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.983 கோடி என மொத்தம் ரூ.5,828 கோடி நிதியை புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும்”

என முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.