புனே

காராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையம் துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு கடந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி துக்காராம் மகாராஜ்ஜை சிறப்பிக்கும் வகையில் புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கவுரவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா வரலாற்றில், முக்கிய ஆன்மிகவாதியான துறவி துக்காராம் மகாராஜ்க்கு மரியாதை செலுத்துவதற்காக புனே விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது பக்தி கவிதைகளுக்காக துக்காராம் நன்கு அறியப்பட்டவர் மற்றும் கீர்த்தனைகள் எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

ஏற்கனவே புனே விமான நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.