பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில  முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி லட்டில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு நெய்யுடன் கலந்து பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில் ல ட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாரங்களிலும் இதுபோன்ற கலப்பட நெய்கள் பயன்படுத்தப்படுவதாக சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடக அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கோயிலில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி நெய்யைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள 1,80,000 கோயில்களில் 35,500 கோயில்கள் கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.