டெல்லி

ரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற்ம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் அவர் முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்ததால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றறு கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுநரிடம் கொடுத்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21 ஆம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகியுள்ள முதல்வ அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதமும் திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிஷி டெல்லி புதிய முதல்வராக நாளை மறுநாள் பதவியேற்பார் எனவும் அப்போது மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.