அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைத்துள்ளது. இந்த ஆட்சி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின்  சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர்  சந்திர பாபு நாயுடு அரசியல்நிகழ்வுகள்உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசினார்.

அப்போது, கடந்த ஜென் ஆட்சியில், , பாரம்பரியம் மிக்க  திருப்பதி மலையின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன், உலக புகழ்பெற்ற பிரசாதமான திருப்பதி   லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.  குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை  பயன்படுத்தி  லட்டு தயாரித்து விற்பனை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறினார்.

ஆனால்,  தற்போது நமது ஆட்சியில் , தரமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு,  தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்” என்றும் தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது சந்திரபாபு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.