ஸ்ரீநகர்

ன்று ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்து, பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த 2018-ல் கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால் ஆட்சி கவிழ்ந்து. அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன.

உச்சநீதிமன்றம் காஷ்மீரில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன்படி காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் கடந்த மாதம் அறிவித்தது.

இதில்முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்றொல் 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன. இத்தொகுதிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 27 ஆயிரத்து 580 ஆகும்.

இந்த தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது. எனவே வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் காஷ்மீர் போலீசார் நிறுத்தப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.