டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை கைப்பற்றப்போவது யார்? என ஆத்ஆம்மியை சேர்ந்த இரு பெண்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில், கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும், அமைச்சர் அதிதியும் களமிறங்கி உள்ளதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபான ஊழல் வழக்கில் கைதாகி சுமார் ஐந்தரை  மாதங்களுக்கு  ஜாமினில் வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,  முதலமைச்சர் பணியை  செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கோ, எந்தவொரு கோப்பிலோ கையெழுத்திடக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவர், முதல்வர் பதவியை உபயோகப்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தனது  முதல்வர்  பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டை நீக்கும்வ கையில், அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.  நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்’ என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதன்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,  இன்று டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்  டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார்கள் என தலைநகர  ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.

முதலமைச்சருக்கான போட்டியில் கெஜ்ரிவால் மனைவியான  சுனிதா கெஜ்ரிவால், டெல்லி  கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி ஆகியோர் தீவிரமாக களமிறங்கி உள்ள நிலையில்,  மேலும் கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரும் முதலமைச்சருக்கான போட்டியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவா என பெரும் எதிர்பார்ப்பு எபந்துள்ளது.

டெல்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, நிர்வாகத்தை சிறப்பாகக் கையாண்டு வந்ததால், இவர் முதல் வரிசையில் உள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் கோபால் ராய் உள்ளார். 49 வயதாகும் கோபால் ராய், ஆம் ஆத்மியில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டிருப்பவர், மாணவர் அமைப்பில் பணியாற்றி, அமைச்சராகி, தொழிலாளர் சமுதாயத்தினருடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது பெயரும் பேசப்பட்டு வருகிறது.

டெல்லி அரசியல் வட்டாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் மிக முக்கிய நபராக விளங்குகிறார்.

முன்னாள் வருவாய் துறை அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால், அவரது கணவரைப் போலவே, வருமான வரித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மிக்காக மக்களவைத் தேர்தலில் டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் சிறப்பாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவ்வப்போது, கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும், கெஜ்ரிவாலின் குரலாக இருந்து வந்துள்ளார்.

இதனால் முதலமைச்சர் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இன்று சந்தித்துப் பேசுவார்கள். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்த பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இந்த சந்திப்பின்போது, டெல்லியின் அடுத்த முதல்வர் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.