மும்பை

சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் கெய்க்வாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்போருக்கு ரூ 11 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது

கடந்த சில நாட்களுக்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்று அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்  அந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல்காந்தியிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராகுல் காந்தி, இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் யோசிக்கும் என்றார். எனவே இந்தியாவில் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க ராகுல்காந்தி நினைப்பதாக சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது.

ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட்

”இந்தியாவில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க நினைப்பதாக ராகுல்காந்தி வெளிநாட்டில் பேசியுள்ளார். இது காங்கிரசின் உண்மை முகத்தை காட்டுகிறது. இடஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன்’

என்று கூறியது நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது..