புதுச்சேரி

ரு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான கைதி விவேகானந்தன்  சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது படுகொலை செய்யப்பட்டார். இது புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்ம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கக் கோரியும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள், அதிமுக சார்பில் முழு அடைப்பு சட்டமன்றம் முற்றுகை, ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

காவல்துறையினர் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்தனர். இவ்விருவரையும் புதுச்சேரி காலாப்பட்டு உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் விவேகானந்தன் சிறை கழிவறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சிறை அதிகாரிகள், அவரது உடலை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.