சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் 3:05 மணிக்கு மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், மறைந்த மார்க்கிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்