டெல்லி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மரணமடைந்தார்.

தற்போது 73 வயதாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நிலைக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

சீதாராம் யெச்சூரிகு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சீதாராம் யெச்சூரியின் உடல் நிலை கவலைக்கிடமானது. எனவே அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சீதாராம் யெச்சூரி சென்னையில் தெலுங்கு பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.  சீதாராம் யெச்சூரி மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரி தொடர்ந்து மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.