டெல்லி

ம் ஆத்மி கட்சி அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் 2 ஆம்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

அரியான் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12 கடைசி தேதியாகும். மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன.

கடந்த பொதுத்தேர்தலில், அரியானாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கி அதிலும் தோல்வியடைந்தது.  பிறகு கடந்த 2019 அரியானா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த திங்களன்று அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது தெரிந்த்தே.

இன்று ஆம் ஆத்மி தனது 2 ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஹவா சிங் ஹென்ரியிலும், பிரவேஷ் மேத்தா பரிதாபாத்திலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா இது குறித்து,

”ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும். ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள்.அரியானா குற்றங்களின் தலைநகராக பாஜக மாற்றி உள்ளது. அரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கி உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவின் மகன்”

என்று கூறி உள்ளார்.