டெல்லி: இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறலாம்  என ன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை  டெல்லி உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு   இணையதளம் செயல்பட்டு வருகிறது.  இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட எவரும் ஒரு கட்டுரையை உருவாக்கலாம். திருத்தலாம் இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், விக்கிபீடியா நிறுவன்ததை கடுமையாக எச்சரித்துள்ளது.

சமீபத்தில்,  ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த தகவலை சிலர் விக்கிபீடியாவில் அவதூறாக சித்தரித்துள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் கேள்விக்கு விக்கிபீடியா முறையான பதில் ராததால், ஏஎன்ஐ நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அதன் மனுவில், ஏஎன்ஐ நிறுவனம் குறித்து,  அவதூறாக சித்தரித்து 3 முறை திருத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு காட்டியதுடன், இதற்கு விக்கிபீடியா நிறுவனம்  2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதி நவீன் சாவ்லா விசாரித்தார். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது விக்கிபிடியா நிறுவனத்தின் கருத்தை தெரிவிக்க கோரியிருந்தார். மேலும், தவறாக சித்திரிக்கப்பட்ட   அந்த பக்கத்தை திருத்தியவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால், அந்நிறுவனம்  நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. இதற்காக காரணமாக, தங்களது நிறுவனம்,  இந்தியாவில் செயல்படாததால் தகவல்களை தருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என சல்ஜாப்பு கூறியது.

இதனால் கோபமடைந்த நீதிபதி, விக்கிபீடியா இந்தியாவில் ஒரு நிறுவனமாக இல்லை என்பது கேள்வி அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். உங்கள் வணிகத்தை இங்கு நிறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடுவோம். எங்களால் இணையதளத்தை தடை செய்யும்படி உத்தரவிட முடியும். உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், இங்கிருந்து பணியாற்றாதீர்கள்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.