ம்மு

ன்று ராகுல் காந்தி காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது.  ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்கி இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளதாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து இன்று ஜம்மு வரும் ராகுல் காந்தி ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் விகார் ரசூல் வாணிக்காக பிரசாரம் மேற்கொள்கிறார். விகார் ரசூல் வாணி பனிஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள டூரு பகுதிக்குச் செல்லும் அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் குலாம் அகமது மீர்-ஐ ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதன் பின்னர் ஸ்ரீநகரில் இருந்து மாலை டெல்லி திரும்புகிறார்.