தராபாத்

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 10 ரயில்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  இதனால் தெலுங்கானாவின் கேசமுத்ரம் மற்றும் மகபூபாபாத் இடையேயான ரயில்வே தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே சென்னை சென்டிரலில் இருந்து சாப்ரா மற்றும் புதுடெல்லிக்கு சென்று, வர கூடிய ரயில்கள் உள்பட 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.

மேலும் திருப்பதி, மன்னார்குடி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்பட கூடிய ரெயில்கள் உள்பட 10 ரயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்து உள்ளது.

மழையை தொடர்ந்து ரயில்வே உதவி எண்ககதராபாத் 27781500, வாரங்கால் 2782751, காசிபேட் 27782660 மற்றும் கம்மன் 2782885 ஆகிய எண்களை, பயணிகள் தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.