நாக்பூர்

பல்பூரில் இருந்து ஐதராபாத்சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நோக்கி சென்ருக்கொண்டு இருந்தது.

இந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் விமானம் அவசரமாக தரையிறக்க நாக்பூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விமானம் நாக்பூர் வந்ததும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.. கு பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டதுடன் இது குறித்து விசாரணையும் தொடங்கியுள்ளது.