ஸ்ரீநகர்

தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மிர் 2 ஆம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.  ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மொத்தம் 90 இடங்கஉள்ளன

அங்கு வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் ந அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.  நேற்று 25-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்பட் ஸ்ரீநகர், கந்தர்பால், பட்கம், பூஞ்ச், ரஜோரி மற்றும் ரீசி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 சட்டசபை தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 5-ந்தேதி தொடங்கும் என்றும், 6-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும் எனவும் அறிவிப்பில் கூறபட்டுள்ளது..