ராஞ்சி

சிராக் பாஸ்வான் மீண்டும் லோக் ஜனசக்தி கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மத்திய மந்திரி சிராக் பஸ்வான், ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் அடுத்த 5 ஆண்டுகள் அவர் அப்பதவியை வகிப்பார். கூட்டத்தில்  அரியானா. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சிராக் பஸ்வான்,

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அது அரசாங்கத்திடம் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதிசெய்யும். ஆனாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் பொதுவில் வருவதை விரும்பவில்லை. அது ஒரு விரிசலை உருவாக்கலாம்”

எனத் தெரிவித்தார்.