னாப்பூர்

பீகார் மாநிலத்தில் 8 சரக்க் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை பீகார் மாநிலத்தில் கிழக்கு மத்திய ரெயில்வேயின் தனாப்பூர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்தில் சிக்கின. பந்துவா-பைமர் யார்டு பகுதியில் நடந்த இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சரஸ்வதி சந்திரா,

”நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதும் ஆரா, கயா மற்றும் தனாப்பூர் ரயில் நிலையங்களில் இருந்து மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்

மேலும் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது ”

என்று கூறியுள்ளார்