லகாபாத்

த்தரப்ப்ரதேச அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விரங்களைஅறிவித்தால் மட்டுமே இந்த மாத ஊதியம் அளிக்க்ப்ப்டும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அம்மாநில முதல்வ யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் இணையதளமான Manav Sampada-ல் டிசம்பர் 31, 2023-க்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

மொத்தம் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றாலும், பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் அதற்கான கால அவசாகம் இந்தாண்டு (2024) ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  பிறகு ஜூலை 31-ம் தேதி சொத்து விவரங்களை சமப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இறுதியாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31-ம் தேதிக்குள் விவரங்களை ஆன்லைனில் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், யாரெல்லாம் விவரங்களை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.  இந்த உத்தரவு அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்தும் இன்னும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத காரணத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்தோஷ் வர்மா விமர்சித்துள்ளார்.