டெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள எம்.எல்ஏ, எம்.பி.க்களில் 151 பேரர் பாலியல் வன்கொடுமை..பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என ஏடிஆர் (Association for Democratic Reforms )  எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் அதிகம் இடம் பிடித்துள்ளவர்கள் எம்எல்ஏக்களில் பாஜவினர் முதலிடம் என்பதும், அதிகபட்சமானபாலியல் வன்முறை சம்பங்கள் நடைபெறும் மாநிலமாக பெண் முதல்வர் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கம் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில்  16 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன், கடந்த  2009 முதல் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 124% அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) அரசியலர்கள், கட்சிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவ்வப்போது அறிக்கை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் புதிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நடத்திய ஆய்வின்  அறிக்கை வெளியாகி உள்ளது.   கடந்த  2019 முதல் 2024 வரை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தவர்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டது.   தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்கள் 4,809 பேரில், 4,693 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இதில் 190 எம்பி.க்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. 151 எம்.பி.எம்எல்ஏக்கள் மீது பாலியல் வழக்குகளும் உள்ளன. 299 பேர் கோடீசுவரர்கள் என்றும் 95 பெண் எம்பிக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட வழக்குகள் உள்ள 151 சிட்டிங் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களில் 16 பேர் சிட்டிங் எம்.பி.க்கள் என்றும் 135 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

கட்சிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜக 54, காங்கிரஸ் 23, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) 17.

மாநிலங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட வழக்குகளில் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஆந்திரா (21), ஒடிசா (17) உள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ள 151 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களில், 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர். இந்த 16 பேரில் இருவர் சிட்டிங் எம்.பி.க்கள், மீதமுள்ள 14 பேர் எம்.எல்.ஏ.க்கள்.

கட்சிகளில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அதிக எண்ணிக்கையிலான சிட்டிங் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ளன, தலா ஐந்து கற்பழிப்பு வழக்குகள் உள்ளன.

மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், தலா இரண்டு பேருடன், கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 151 எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது, 135 எம்எல்ஏக்கள் மற்றும் 16 எம்.பி.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக 2 எம்.பி.க்கள், 14 எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு, ஐபிசி பிரிவு 376-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பெண்களுக்கு எதிராக குற்றத்தைச் செய்த புகாருக்கு ஆளாகி, வழக்குகளைச் சந்திப்பவர்களில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள்  54 பேர் இடம்பெற்று உள்ளனர்.

இதையடுத்து 2வது இடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இடம்பிடித்துள்ளது.  காங்கிரஸில் 23 எம்.பி., எம்எல்ஏக்கள், தெலுங்கு தேசம் கட்சியில் 17 எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளனர். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பாஜக மற்றும் காங்கிரஸில் இருந்து தலா 5 பேர் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டிலிருந்து அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளைக் கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 124% அதிகரித்துள்ளது

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 31% (170) பேர் பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.

2019 இல் வெற்றி பெற்ற 539 பேரில் வேட்பாளர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டனர், 29% (159) பேர் கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டில், 542 எம்.பி.க்களில் 112 அல்லது 21% எம்.பி.க்கள் கடுமையான கிரிமினல் வழக்குகளைக் கொண்டுள்ளனர்.

2009 இல் 543 எம்.பி.க்களில் 76 பேர் அதாவது 14% எம்.பி.க்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 15.3% ஆகவும், சுத்தமான பின்னணி கொண்ட வேட்பாளர் 4.4% எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

18வது லோக்சபாவில், கட்சிகளில், 240 வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 94 பேர் கிரிமினல் வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களைக் கொண்ட பாஜக. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் (49), சமாஜ்வாதி (21) ஆகிய கட்சிகள் உள்ளன.

என்னதான் தீர்வு?

அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி கொண்ட குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை புகார்களுக்கு உள்ளானவர்களுக்கு சீட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை இந்த வழக்குகளை முறையாகவும் தீர விசாரித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கும் பொறுப்பு

அதேபோல இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை மக்களும் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.