சென்னை:  தமிழ்நாடு அரசின்  தோட்டக்கலைத்துறைக்கு  தேர்வான 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  வேளாண்மை – உழவர் நலத்துறையில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகைளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.