சென்னை:  தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருப்பதால், தமிழக அமைச்சரவை இன்று மாலை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் அமைச்சர் உதயநிதி துணைமுதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று  சென்னை சேப்பாக்கத்தில் ரூ.5 கோடி செலவில் தரம் உயரத்தப்பட்ட மாநில அவசர கால பேரிடர் மையத்தை  திறந்து வைத்த முதலமைச்சர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதலமைச்சரிடம் செய்தியாளர்கள்,   அமெரிக்க பயணம், முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை  கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்தபிறகு,  அமைச்சரவை மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “எனக்கு எந்த தகவலும் வரவில்லை” என வியப்புடன்  பதிலளித்துள்ளார்.