டெல்லி

சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விரைவில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உருவாக்க உள்ளது.

உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.  எனவே உலக சுகாதார மையம் அவசர நிலையாக அறிவித்துள்ளது.  ஆப்ரிக்காவில் தொடங்கிய இந்த பாதிப்பு ஆசியாவிலும் பரவை தொடங்கி உள்ளது.

இதையொட்டி இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா,

“குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியில் தடுப்பூசி உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்”

என்று தெரிவித்துள்ளார்.