டெல்லி

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் 6 எம் எல் ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற்ம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் முதல்-மந்திரி பதவியில் இருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகக பொறுப்பேற்றுக்கொண்டார். சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்.களுடன் சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பாய் சோரன் இது குறித்து செய்தியாளர்களிடம் தம்முடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளதாகவும்  தாம்யாரையும் சந்திக்கவில்லை என்றும் தாம் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.