பெங்களூரு

பெங்களூரு – தும்கூரு சாலையில் வீலிங் செய்த இளைஞரின் பைக்கை மக்கள் உடைத்து நொறுக்கி உள்ளனர்.

இன்று காலை பெங்களூரு -தும்கூரு நெடுஞ்சாலையில் திடீரென இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் வீலிங் செய்துள்ளர் இத்னால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை மிகவும் அச்சமும் ஆத்திரமும் அடைந்துள்ள்னர்.

எனவே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து இளைஞரின் பைக்கை அப்படியே தூக்கி பாலத்தில் இருந்து கீழே போட்டனர். சுமார் 30 அடி உயரத்திலிருந்து பைக்கை கீழே போட்டதால் இளைஞர்ன் பைக் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது

பொதுமக்களின் இந்த செய்கையால் கடும்  அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் பொதுமக்களிடம் ஏதும் பேச முடியாமல் இருந்துள்ளார்.  தற்போது இது குறித்த புகைப்படங்களை மக்கள் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

காவல்துறையினர் பரபரப்பான இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் அந்த இளைஞரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தக்வல்க்ல் தெரிவிக்கின்றன.