திருவனந்தபுரம்

கேரளாவில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் போது முடி அவிழாத நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அதை கொத்தி அவிழ்த்துள்ளது.

நேற்று முன் தினம் நாடெங்கும் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  பள்ளிகள், வீடுகள், பொது இடங்கள் என நாடெங்கும் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி உள்ளனர்.

அவ்வகையில் கேரள் மாநிலத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகள் கீதம் பாட தேசியக் கொடி ஏற்றப்பட்டது.  அந்தக் கொடி மேலே ஏற்றப்பட்டதும் கயிற்றின் முடி அவிழாமல் அப்படியே இருந்துள்ளது.

இதைக் கண்ட ஒரு பறவை எங்கிருந்தோ பறந்து வந்து அந்தக் கொடியின் முடிச்சை கொட்தி அவிழ்த்து கொடியை  பறக்க வைத்துள்ளது.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இதைக் கண்ட மக்கள் மெய்சிலிர்த்துளனர்.