டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் இரண்டு மாநில  சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட  உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன் . ஜம்மு காஷ்மீருக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.