டெல்லி:   மேற்கு வங்கத்தில்  மீண்டும் ஓர் நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும்,   மம்தா அரசும், மருத்துவமனையும்,  குற்றவாளிளை பாதுகாக்க முனைகிறது என  ராகுல் காந்தி கடுமையாாக விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல்வன்முறை செய்யப்பட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம்  குறித்து எதிர்க்கட்சி தலைரான காங்கிரஸ் எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மீண்டும் ஓர் நிர்பயா சம்பவம் நடைபெற்றுள்ளது, இந்த குற்றவாளிகளை மம்தா அரசும், மருத்துவமனை நிர்வாகமும் பாதுகாக்க முனைகிறது என  ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓர் கருத்தரங்கில் அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில்,  பெண் பயிற்சி மருத்துவர்  ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுவும்  மருத்துவருக்கு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பெண் பயிற்சி மருத்துவரை, கொடூமையாக கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தக்கு  மம்தா அரசை எதிர்க்கட்சகிள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.  மம்தா காட்டாட்சி நடத்தி வருகிறார் என்றும்,  ஒருதலைப்பட்சமான அவரது நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அவரது அகங்கார பேச்சு  மற்றும் தனது ஆதரவாளரக்ளை ஏவி, எதிர்ப்பவர்களை கடுமையாக தாக்கி வருவதாலும், அவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றங்களும் கடுமையான வார்த்தைகளை கூட பிரயோகிப்பதில்லை என கூறப்படுகிறது.

தற்போதும் பெண் முதலமைச்சரான, மம்தா, இந்த கொடூர பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவே விமர்சனம் செய்து வருகிறார். தனது ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, எதிர்க்ட்சிகளை சாடுவதிலும், இந்த சம்பவத்தை அரசியலாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று அளித்த உத்தரவின்படி,  சிபிஐ இன்று முதல் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மம்தா அரசுக்கு   சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தற்போது கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுடிறித்து அவர் தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில், ” கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நேர்ந்த இந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவருவதால், மருத்துவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டு வருவது, கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி முன்வந்து படிக்க வைப்பார்கள் என்று இந்த சம்பவம் சிந்திக்கத் தூண்டுகிறது.

நிர்பயா (டெல்லி) வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன?

ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்தும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த தாங்க முடியாத வலியில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ” என்று   பதிவிட்டுள்ளார்.

டெல்லி நிர்பயா :

கடந்த 2012ஆம்ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவச் சிகிச்சை பலனின்றி சில நாட்களில் உயிரிழந்தார். இந்த கொடூர குற்றவாளிகளுக்கு அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு , கடந்த 2020இல் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் சிறையில் உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.