டெல்லி:  ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை சந்தித்து ஆசி கூறிய நிலையில், தற்போது மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸில் நடைபெற்று முடிந்த நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்தியா பதக்க பட்டியலில் 71-வது இடம் பிடித்ரது பெ ரும்தோ்லிவைய சந்தித்தது.   117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம்  மட்டுமே பெற்றது. துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கம் கிடைத்தது. மனு பாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டலில் வெண் கலம் வென்றார். அதோடு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப் ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற வர லாற்றினை படைத்தார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலையில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் பெற்றார். மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 57 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். ஆக்கியில் வெண்கலம் கிடைத்தது. தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட   நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை சுதந்திர தினத்தன்று சந்திக்கிறார். சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு 1 மணி அளவில் 117 வீரர், வீராங்கனைகளை அவர் சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.