கொல்கத்தா

ன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பலாத்காரக் கொலை குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

கடந்த 9 ஆம் தேதி காலை மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த்டன் 2 ஆம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார்.

அவர் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் வெளிநபர் ஒருவரை கைது செய்தது மருத்துவக்கல்லூரியின் அனைத்து பிரிவுகளுக்கும் அவர் சர்வ சாதாரணமாக சென்றுவந்ததாகஉம் தெரிவிக்கப்பட்டதுர்.

அதேநேரம் இந்த பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக டாக்டர்கள் மற்றும் கொல்லப்பட்ட டாக்டரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்காக டாக்டர்கள் போராடி வருகின்றனர். நேற்று கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார  இளம் பெண் டாக்டரின் பலாதார கொலை விவகாரத்தில் சி பி ஐ விசாரணை கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று பெண் டாக்டர் கொலை வழக்கு மற்றும் இது  குறித்த வேறு சில மனுக்களும் விசாரணை செய்யப்பட உள்ளது.