டெல்லி

ச்சநீதிமன்றம் கவிதா ஜாமீன் மனு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பியது.   இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர்.

கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஏப்ரல் 11ம் தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தது கவிதா மீது கடந்த ஜூன் 6-ந்தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் கவிதாவுக்கு ஜாமீன் மறுத்ததால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வதான் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.