காங்போக்பி

ணிப்பூரில் முன்னல் எம் எல் ஏ வீட்டில் குண்டு வெடித்ததில் அவருடைய மனைவி மரணம் அடைந்துள்ளார்.

மணிப்பூரில் உள்ள காங்போக்பி மாவட்டத்தின் எகோ முலாம் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப் வசித்து வருகிறார். கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாய்குல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

இவரது மனைவி சபம் சாருபாலா நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டில் இருந்த குப்பைகளை எரித்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேர்கொண்டனர்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலம் வாங்கியது தொடர்பாக ஹௌகிப்புக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர்கள் நாட்டு வெடிகுண்டை குப்பைக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.