ஷிவமொக்கா ,

ளர்ப்பு பூனை கடித்ததால் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாய் கடித்ததால் மரணம் என்னும் செய்திகள் பரவி வருவதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள்னர்.  இந்நிலையில் தமிழகத்துக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் வளர்ப்புப் பூனை கடித்ததால் ஒரு பெண் மர்ணமடைந்துள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தர்லகத்தா கிராமத்தைச் சேர்ந்த கங்கிபாய் என்னும் பெண்ணின் காலில் வளர்ப்பு பூனை கடித்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்று உடனடியாஅக ஒரு ஊசி போட்டு. அதில் அந்த பெண் குணமடையவே மற்ற ஊசிகள் போடவில்லை.

ஆனால் இந்த அலட்சியம் அவரது உயிரைப் பறித்துள்ளது. அந்தப் பெண் பூனை கடித்ததால் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு பலியானதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். ரேபீஸ் நோய் பெரும்பாலும் நாய் கடியால் ஏற்படுகிறது என்ற நிலையில் பூனை மூலம் ரேபீஸ் நோய் பரவி பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பூனை, பெண்ணை கடிக்கும் முன் இளைஞர் ஒருவரையும் கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல் கடந்த ஆண்டு, உத்தர பிரதேசத்தின் அக்பர்புர் நகரில் அரசு ஆசிரியரையும், அவரது 24 வயது மகனையும் அவர்களது வளர்ப்பு பூனை கடித்து கீறி ரேபீஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு இருவரும் ஒரு வாரத்தில் இறந்தனர். அந்தப் பூனையை ஒரு தெருநாய் கடித்ததால் அதன் மூலம் ரேபீஸ் நோய்க்கிருமி அந்த பூனைக்கும் பரவியதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.