யநாடு

யநாட்டில் திடீரென பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட வயநாட்டில் பூமிக்கு அடியில் மர்ம சத்தம் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சத்தம் கேட்டுள்ளது. குறிச்சியார் மலை, பிணங்கோடு மூரிக்காப், அம்புகுத்தி மலை, எடக்கல் குகைகளை சுற்றிய பகுதிகளில் இன்று திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது போல் பூமிக்கடியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. ஆனால் நிலஅதிர்வு ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

எனவே பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி ஓடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மக்கள் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.