யநாடு

டும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் பல மலைக்கிராமங்கள் சின்னாபின்னமாகி விட்டது. சுமார் 400க்கும் அதிகனானோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மண் மூடியும், உருக்குலைந்தும் காணப்படுகிறது.

இந்த நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் எஞ்சி இருக்கும் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். அந்த வீடுகளில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளதால் இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.