பாரிஸ்

ற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு  முன்னேறி உள்ளார்.

தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்  தங்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்ங்களை வென்று வருகின்றனர்.

இன்று இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களில் தகுதி சுற்றின் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.

குரூப் பி பிரிவின் தகுதி சுற்றின் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.