பாரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.

இன்றைய காலிறுதி போட்டியில் இந்தியாவும், பிரிட்டனும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதத் தொடர்ந்து நடந்த ஷூட் அவுட் முறையில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி  4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுது.

தற்போது இந்திய ஆக்கி ஆடவர் அணி  பிரிட்டனை வீழ்த்தி அரையிறுத்திகு முன்னேறியுள்ளது. அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினாவுடன் இந்திய அணி ,மோத உள்ளது.