யநாடு

துவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 30-ம் தேதி அதிகாலை கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 4-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் மீட்பு குழு தேடி வருகிறது.

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 344-ஆக உயர்ந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.